ADDED : செப் 12, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். நிலைய அலுவலர் சங்கர் தலையிலான தீயணைப்பு வீரர்கள், பேரிடர் காலங்களில் தீ தடுப்பு மற்றும் அடுக்குமாடி கட்டடங்களில் அவசர காலங்களில் வெளியேறுவது தொடர்பாக போலி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
நிலைய அலுவலர் (போக்குவரத்து) பன்னீர்செல்வம் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனிருந்தனர்.