/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலில் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை
/
கடலில் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை
ADDED : நவ 27, 2024 08:13 AM
கடலுார் : கடலுார் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (27ம் தேதி) புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், தமிழக கடற்பகுதியில் 75 கி.மீ., வரை காற்று வீச வாய்புள்ளது.
எனவே, கடலுார் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ் கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்.
மேலும், கடற்கரை பகுதி மற்றும் முகத்துவார பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள், மீன்பிடி வலைகளை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இத்தகவலை கடலுார் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.