/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை
/
கடலுார் மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை
ADDED : டிச 18, 2024 07:36 AM

கடலுார் : கடலுார் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலுார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் செய்திக்குறிப்பு;
இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவுகின்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக கடலில் 40 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது.
இதனால், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுத்தப்படுகிறது. மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும். மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.