ADDED : மார் 18, 2024 03:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் :  லோக்சபா தேர்தல் வருவதையொட்டி, ஸ்ரீமுஷ்ணத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடந்தது.
சேத்தியாதோப்பு டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் தோரா மற்றும் 60 படைவீரர்கள், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் கலந்துக் கொண்டனர்.

