
கடலுார்: கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.,சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ.,பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கடலுார் தெற்கு மாவட்டசெயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் வடக்குத்து கோவிந்தராஜ் ஏற்பாட்டில் வடக்குத்து, இந்திரா நகரில் 2ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி, 2ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
வடக்கு மேலுாரில் மாவட்ட தகவல்தொழில் நுட்ப பிரிவு செயலாளர் திருமலைவாசன் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேருக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் தங்கப்பன் ஏற்பாட்டில் குள்ளஞ்சாவடியிலும், கடலுார் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் ஏற்பாட்டில் சி.என்.பாளையத்தில் ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, 2ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை மாவட்டசெயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் வழங்கினார்.
பண்ருட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், குறிஞ்சிப்பாடி பேரூர் செயலாளர் ஆனந்தபாஸ்கர், மாவட்ட அவைத்தலைவர் முத்துலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தராஜ், ஞானசெல்வி கல்யாணசுந்தரம், பொருளாளர் தேவநாதன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், மாவட்ட ஜெ.,பேரவை இணைசெயலாளர் கிருஷ்ணன்,
எம்.ஜி.ஆர்.,மன்ற இணை செயலாளர் பெருமாள், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் அன்பு, விவசாய அணி செயலாளர் லோகநாதன், மாணவரணி செயலாளர் சஞ்சீவி, மகளிர் அணி செயலாளர் ஜான்சி ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

