sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலம் சுவீட் கடைகளில் உணவு பாதுகாப்பு குழு ஆய்வு

/

விருத்தாசலம் சுவீட் கடைகளில் உணவு பாதுகாப்பு குழு ஆய்வு

விருத்தாசலம் சுவீட் கடைகளில் உணவு பாதுகாப்பு குழு ஆய்வு

விருத்தாசலம் சுவீட் கடைகளில் உணவு பாதுகாப்பு குழு ஆய்வு


ADDED : அக் 29, 2024 06:43 AM

Google News

ADDED : அக் 29, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சுவீட் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில், விருத்தாசலம் பகுதி சுவீட் ஸ்டால்கள் மற்றும் தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லத்தம்பி தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது இனிப்பு மற்றும் பலகாரங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை சேர்க்கக்கூடாது. பணியாளர்கள் மருத்துவ தகுதிச்சான்று பெற்றிருக்க வேண்டும். பணியாளர்கள் அனைவரும் கையுறை, தலைமுடி கவசம் அணிந்திருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது. ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

இனிப்பு காரப் பொருட்களை அச்சிட்ட பேப்பரில் மடித்து கொடுக்கக் கூடாது, பட்டர் பேப்பர் அல்லது வெள்ளை தாள்களை தான் பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர்.






      Dinamalar
      Follow us