/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிர் குழுக்களுக்கு ரூ. 60 லட்சம் கடன்
/
மகளிர் குழுக்களுக்கு ரூ. 60 லட்சம் கடன்
ADDED : பிப் 17, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : சென்னையில் நடந்த விழாவில், குடிதாங்கிசாவடி மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடனுதவி வழங்கினார்.
சென்னையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இதில், முதல்வர் ஸ்டாலின், நெல்லிக்குப்பம் நகராட்சி, 10 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அடங்கிய குடிதாங்கிசாவடி பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு 60 லட்சம் ரூபாய்க்கான கடனுதவி வழங்கினார்.
இதற்கு வழிகாட்டுதலாக இருந்த கலெக்டர் அருண் தம்புராஜ், மகளிர் திட்ட இயக்குனர் சுருதி, உதவி திட்ட அலுவலர்கள் செல்வகுமார், ராஜேஷ்குமார் ஆகியோருக்கு மகளிர் சுய உதவிக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.