/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புயலால் பாதித்தவர்களுக்கு மாஜி அமைச்சர் உதவி
/
புயலால் பாதித்தவர்களுக்கு மாஜி அமைச்சர் உதவி
ADDED : டிச 02, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை முன்னாள் அமைச்சர் சம்பத் வழங்கினார்.
கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட கடலுார் பாதிரிக்குப்பம், பெருமாள் நகர், காந்திநகர், பகுதி பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி, பிரட், பிஸ்கட், பால் போன்ற அத்தியாவசிய நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் சம்பத் வழங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் குமார், கடலுார் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா, செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனி ருந்தனர்.