/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபர் மீது தாக்குதல்; நான்கு பேர் மீது வழக்கு
/
வாலிபர் மீது தாக்குதல்; நான்கு பேர் மீது வழக்கு
ADDED : அக் 13, 2025 12:14 AM
குள்ளஞ்சாவடி; வாலிபர்களை தாக்கிய நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிரிதரன், 26. அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் சந்தானகிருஷ்ணன் என்பவருடன், நேற்று முன்தினம் பைக்கில் பெரியகுப்பம் சென்றார்.
அப்போது எதிரே வந்த சிலர், வாலிபர்களுடன் பைக்கில் செல்வது தொடர்பாக கேள்வி எழுப்பி தகராறில் ஈடுபட்டனர்.
தகராறில் ஈடுபட்ட அந்த கும்பல் சிறிய கத்தி கொண்டு கிரிதரன், சந்தானகிருஷ்ணனை தாக்கினர். அதில் காயமடைந்த இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராமநாதன் மற்றும், 3 நபர்களை மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.