ADDED : ஜன 25, 2026 03:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் பேலஸ் சுமங்கலி சில்க்சில் இலவச கண் சிகிச்சை, பொது நல மருத்துவம் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடந்தது.
கடலுார் பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் மற்றும் புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆகியன இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் நிஸ்டர் அலி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், முகாமை துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., தமிழ் இனியன் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் டாக்டர் சதீஷ், தேசிங்குராஜா, ஆறுபடை வீடு மருத்துவக்கல்லுாரி முதல்வர் மணி, கண்காணிப்பாளர் தாமோதரன், டாக்டர் அருணாசலம், ஜெயந்தி உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றனர்.

