UPDATED : ஆக 22, 2026 07:14 PM
ADDED : ஆக 22, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
கடலுார்:நெய்வேலியில் போக்சோ வழக்கில் சிறை சென்று, ஜாமினில் வெளியே வந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.நெய்வேலி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2025ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஸ்ரீநாத் பிரேம் 21;.
இவர் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அதனால் கோர்ட் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. தலைமறைவாக இருந்து வந்த ஸ்ரீநாத் பிரேம்மை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
