sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பவுர்ணமி ஊர்வலம் துவக்கம்

/

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பவுர்ணமி ஊர்வலம் துவக்கம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பவுர்ணமி ஊர்வலம் துவக்கம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பவுர்ணமி ஊர்வலம் துவக்கம்


ADDED : நவ 16, 2024 05:22 AM

Google News

ADDED : நவ 16, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று முதல் பவுர்ணமி ஊர்வலம் துவங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆர்வத்துடன் கோவிலை வலம் வந்து வழிபட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று இரவு கிரிவலம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

கிரிவலத்தில் ஒவ்வொரு மாதமும், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதனையொட்டி, பிரதான சிவாலயங்களில் பவுர்ணமி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, உலகின் மைய பூமியான சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோவிலில் நேற்று முதல் பவுர்ணமி ஊர்வலம் செல்ல, இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதனையேற்று நேற்று இரவு 8 மணியளவில், மழை பெய்த போதிலும், பக்தர்கள் பவுர்ணமி ஊர்வலம் செல்ல துவங்கினர்.

பக்தர்கள், நடராஜர் கோவில் மாட வீதியை மூன்று முறை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இனி மாதந்தோறும், திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல முடியாதவர்கள், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பவுர்ணமி ஊர்வலம் செல்லலாம்.

தில்லையில், அர்த்தசாம பூஜையில் சிவகணங்கள் அனைத்தும் ஓடுங்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே, உலகில் உள்ள அனைத்து கோவில்களுக்கு பின்பு, சிதம்பரம் நடராஜருக்கு அர்த்தசாம பூஜை நடைபெறுகிறது. அந்த நேரத்தில் பவுர்ணமி ஊர்வலம் செல்வது சிறப்பு என ஆன்மீக குழுவினர் கூறினர்.






      Dinamalar
      Follow us