/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புத்தேரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு
/
புத்தேரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு
ADDED : அக் 18, 2024 06:47 AM

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், செங்கமல தாயாருக்கு புரட்டாசி பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, காலை 8:00 மணியளவில் உலக மக்கள் நலன்வேண்டி, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம்; 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 9:30 மணிக்கு, கலச ஸ்தாபனம்; 10:00 மணிக்கு குபேர பூஜை, 10:30 மணிக்கு 1008 தாமரைகளால் மகாலட்சுமி சூக்த மூல மந்திர யாகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.