/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 26, 2025 07:34 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷனில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட இடங்களில் இருந்து, விநாயகர் சிலை அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
10 அடிக்கு மேல் சிலைகள் வைக்க கூடாது. விநாயகர் சிலைகள் கரைப்பது குறித்த தகவல்களை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். தீப்பிடிக்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும். 'பிளாஸ்டர் ஆப் பாரிசில்' சிலை தயாரிக்க கூடாது. சிலை அருகே பாதுகாப்பிற்கு ஆட்கள் இருக்க வேண்டும் என, அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும், சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடம், ஒலிபெருக்கியின் தன்மை, மின்சார அனுமதி, ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டிய நேர கட்டுப்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.