ADDED : ஏப் 30, 2025 07:16 AM
அ நிறம் | அளவு
கடலுார்; அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டுமென, மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் மாநில மாட்டு வண்டி தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சவுந்திரராஜன் வரவேற்றார். அரசு மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்காக மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் தண்டபாணி நன்றி கூறினார்.
