ADDED : ஜூலை 27, 2025 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியில் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கு குறுவட்ட அளவில் எறிபந்து போட்டி நடந்தது. இதில், திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளி மாணவிகள் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடம் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
19 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நிறுவனர் கோடி, தாளாளர் சிவகிருபா, பள்ளி முதல்வர் அய்யாதுரை ஆகியோர் பாராட்டினர். நிர்வாக அலுவலர் சித்ரா, உடற்கல்வி ஆசிரியை பிரியா உடனிருந்தனர்.