ADDED : செப் 27, 2024 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில், 7 பேர் படுகாயமடைந்தனர்.
பண்ருட்டியில் இருந்து நேற்று மாலை தடம் எண்.6 அரசு பஸ் குள்ளஞ்சாவடிக்கு பயணிகளுடன் சென்றது. பஸ்சை டிரைவர் குமார், 47; ஓட்டினார்.
பஸ் புலியூர்காட்டுசாகை - திரட்டிக்குப்பம் இடையே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வயல்வெளியில் கவிழ்ந்தது.
இதில், டிரைவர் குமார், கண்டக்டர் சிவபெருமாள், 54; மற்றும் பயணிகள் 5 பேர் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.