ADDED : மார் 31, 2025 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் துறைமுகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
முதுநகர் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப் இன்ஸ்பெக்டர் கணபதி விழாவை துவக்கி வைத்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரகுராமன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராதா முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக மேயர் சுந்தரி ராஜா, தி.மு.க,. மாநகர செயலாளர் ராஜா, குருதேவ் ஜூவல்லரி உரிமையாளர் சந்திரகுமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மாநகர கவுன்சிலர்கள் கவிதா, பாலசுந்தர், புள்ளியியல் உதவியாளர் கருணாமூர்த்தி, பள்ளி மேலாண்மைக்குழு துணை தலை வர் மெகருன்னிசா பங்கேற்றனர்.
போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
உதவி தலைமையாசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.