/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறிவுரை: கடந்தாண்டு அனுமதித்த 5,833 பேரில் 3,300 சுகப்பிரசவம்
/
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறிவுரை: கடந்தாண்டு அனுமதித்த 5,833 பேரில் 3,300 சுகப்பிரசவம்
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறிவுரை: கடந்தாண்டு அனுமதித்த 5,833 பேரில் 3,300 சுகப்பிரசவம்
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறிவுரை: கடந்தாண்டு அனுமதித்த 5,833 பேரில் 3,300 சுகப்பிரசவம்
ADDED : நவ 05, 2024 06:09 AM
கடலுார்:கர்ப்பிணிகள் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து, சரியான சிகிச்சை எடுத்தால் அறுவை சிகிச்சை தவிர்த்துசுகப்பிரசவம் ஏற்படும் என அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தமிழக அரசு கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. நகர்ப் புறம் மற்றும் கிராமப் புறங்களில் வசிக்கும் ஏழைப் பெண்கள் கர்ப்பமடைந்து 12 வாரத்திற்குள் கிராம மற்றும் நகர செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விபரங்களைத் தெரிவித்து பெயரை பதிவு செய்ய வேண்டும். பின், இந்த தொகை, கர்ப்பிணிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இதற்கிடையே, கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் திறனை மேம்படுத்தும் விதமாக இரும்புச்சத்து டானிக், உலர் பேரிச்சை, புரதச்சத்து பிஸ்கெட், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய, 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தால் மட்டுமே வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 11 அரசு மருத்துவமனைகள், 64 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 22 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதன்படி, கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 5,833 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில், 3,300 குழந்தைகள் சுகபிரசவத்தில் பிறந்துள்ளது.
இதேபோன்று, கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 3,209 குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மாவட்டம் முழுதும் 31 ஆயிரத்து 91 குழந்தைகள் பிறந்துள்ளது.
இதேபோன்று, மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை 12 ஆயிரத்து 5 குழந்தைகள் பிறந்துள்ளது.
கடலுார் அரசு மருத்துவமனைக்கு, கடலுார் சுற்றுப்பகுதிகளை தவிர்த்து மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து வரும் கர்ப்பிணிகளுக்கும் பிரசவம் பார்க்கப்படுகிறது.
இதனால், கிரிட்டிக்கல் சமயத்தில் கர்ப்பிணிகள் வருவதால், அவர்களின் விருப்பத்தோடு சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்யும் நிலை உள்ளது. கர்ப்பிணிகள் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சையை தவிர்க்க, அரசு மருத்துவமனை டாக்டர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இது குறித்து அரசு மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கர்ப்பிணிகள் வீட்டு வேலை செய்வது, சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு சரியாக வர வேண்டும். பரிசோதனையின்போது ரத்த சோகை கண்டறியப்பட்டால், சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இவைகளை கடைபிடித்தால் சுகப்பிரசவம் நடைபெறும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து, சரியான சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பிரசவத்தின்போது வலிப்பு, மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகும்' என்றார்.