/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளிக்கு ஹங்கேரி நாட்டினர் நிதியுதவி
/
அரசு பள்ளிக்கு ஹங்கேரி நாட்டினர் நிதியுதவி
ADDED : செப் 21, 2024 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகை தந்த ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரி நாட்டினர், கிள்ளை நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்து பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடினர்.
அப்போது, பள்ளி மாணவர்கள் தேசிய பற்றுள்ள பாடல்களை பாடினர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பள்ளி வளர்ச்சிக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினர்.
நிகழ்ச்சியில், கிள்ளை மீனவர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் நீதி மணி, பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.