sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் கடலுாரில் சிறை நிரப்பும் போராட்டம்

/

அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் கடலுாரில் சிறை நிரப்பும் போராட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் கடலுாரில் சிறை நிரப்பும் போராட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் கடலுாரில் சிறை நிரப்பும் போராட்டம்


ADDED : ஜன 23, 2025 07:56 AM

Google News

ADDED : ஜன 23, 2025 07:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில் கடலுார் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.

சங்க சிறப்பு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தலைவர் மணிகண்டன், பொதுச் செயலாளர் முருகன், துணை பொதுச் செயலாளர்கள் கண்ணன், ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

இதில், 15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடித்து, 1.9.2023 முதல் அரியர்ஸ் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 110 மாத பஞ்சப்படி மற்றும் பண பலன்களை வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து, பொருளாளர் அரும்பாலன், நிர்வாகிகள் நடராஜன், ராஜ், விரைவு போக்குவரத்து மத்திய சங்க துணைத் தலைவர் சிவகுமார், பொருளாளர் கணேசன், பணிமனை செயலாளர் ஞானசக்தி, பொருளாளர் தன்ராஜ் உட்பட பலர், ஜவான் பவன் சாலைக்கு ஊர்வலமாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். சிலர் உழவர் சந்தை முன்பும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 108 பேரை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us