/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடக்குத்து ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்
/
வடக்குத்து ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்
ADDED : ஜன 27, 2025 12:58 AM

நெய்வேலி; வடக்குத்து ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
பி.டி.ஓ.,க்கள் வெங்கடேசன், ராமச்சந்திரன் தலைமை தாங்கினர். வி.ஏ.ஓ.,க்கள் விஸ்வநாதன், சுகுமார், சுகாதாரத்துறை பார்த்திபன், விவசாயத்துறை சத்தியா முன்னிலை வகித்தனர்., ஊராட்சி மன்ற செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், தலைவர் வீரராமச்சந்திரன், சடையப்பன், வெங்கடேசன், ஏழுமலை, கல்யாணசுந்தரம். டாக்டர் ராஜேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

