/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனைத்து ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்
/
அனைத்து ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்
ADDED : ஆக 14, 2025 06:39 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டுமென, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (15ம் தேதி) அனைத்து கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில், பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் பொதுவான இடங்களில் நடத்த வேண்டும்.
இதனை கிராம பொதுமக்களுக்கும், தனி அலுவலர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், ஊராட்சி தணிக்கை அறிக்கை, துாய்மையான குடிநீர் வினியோகம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
கூட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்.