/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேரன் தாக்கியதில் தாத்தா உயிரிழப்பு நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு
/
பேரன் தாக்கியதில் தாத்தா உயிரிழப்பு நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு
பேரன் தாக்கியதில் தாத்தா உயிரிழப்பு நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு
பேரன் தாக்கியதில் தாத்தா உயிரிழப்பு நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு
ADDED : ஜூலை 11, 2025 05:33 AM

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அருகே சொத்து பிரச்னையில், பேரன் தாக்கியதில் காயமடைந்த தாத்தா இறந்தார்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி,70; விவசாயி. இவரது மனைவி ராணி, 65. இவர்களுக்கு கலா, அஞ்சம்மாள் என்ற இரு மகள்கள், பாபு என்ற மகன் உள்ளனர்.
கலாவை அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு பிரகாஷ்,26; என்ற மகன் உள்ளார்.
தந்தை இறந்தவிட்ட நிலையில், பிரகாஷ், தனது தாத்தா முனுசாமி வீட்டில் தங்கி டிங்கரிங் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் முனுசாமி வசிக்கும் இடத்தின் அருகே உள்ள இடத்தை, பிரகாஷ் தனக்கு தரும்படி கேட்டுள்ளார்.
ஆனால், அந்த இடத்தை இரண்டாவது மகள் அஞ்சம்மாளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், அந்த இடத்தை தனக்கு தராமல் எப்படி சித்தி அஞ்சம்மாளுக்கு தரலாம் எனக் கேட்டு முனுசாமியிடம் தகராறு செய்தார்.
நேற்று முன்தினம், பாட்டி ராணியிடம் தகராறு செய்துள்ளார். தட்டிகேட்ட முனுசாமியை தாக்கி கீழே தள்ளினார்.
இதில் பலத்த காயமடைந்த முனுசாமி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று இறந்தார்.
புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

