ADDED : பிப் 13, 2026 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவி லில் மாசி மாத மயான கொள்ளை வரும், 16ம் தேதி நடக்கிறது.
விழாவை முன்னிட்டு நாளை மாலை 5:00 மணி க்கு கெடில நதியிலிருந்து சக்திகரகம் எடுத்து வரப்பட்டு, கொடியேற்றும் விழா நடக்கிறது. நாளை மறுநாள் அம்மன் வீதி உலா நடக்கிறது. வரும், 15 ம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு குறி சொல்லுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கி ன்றன.
அடுத்த நாள், 16ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு மயான கொள்ளை நடக்கிறது. தொடர்ந்து, திருத்தேரில் அம்மன் வீதி உலா நடக்கிறது. வரும், 17 ம் தேதி காலை 10:00 மணிக்கு சாகை வார்த்தல் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இரவு அம்மன் வீதி உலா நடக்கிறது.

