sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆலமரம் முறிந்து விழுந்து கீரை வியாபாரி பலி

/

ஆலமரம் முறிந்து விழுந்து கீரை வியாபாரி பலி

ஆலமரம் முறிந்து விழுந்து கீரை வியாபாரி பலி

ஆலமரம் முறிந்து விழுந்து கீரை வியாபாரி பலி


ADDED : ஜன 22, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 22, 2025 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே, ஆலமரம் முறிந்து சாலையில் விழுந்ததில் மொபட்டில் சென்ற கீரை வியாபாரி உடல் நசுங்கி இறந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம், 60. கீரை வியாபாரி. நேற்று காலை 5:45 மணியளவில், தனது மொபட்டில், விருத்தாசலத்தில் கீரைகளை விற்பனைக்கு கொடுத்துவிட்டு, மீண்டும் ஊருக்கு புறப்பட்டார்.

உளுந்துார்பேட்டை சாலையில், கோ.பூவனுார் பஸ் நிறுத்தத்தை கடந்தபோது, சாலையோரம் இருந்த நுாற்றாண்டுகால ஆலமரம் முறிந்து விழுந்தது.

இதில் மொபட்டில் சென்ற விநாயகம் சிக்கி, உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.

தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, பொதுமக்கள் உதவியுடன் மரக்கிளையை அகற்றி, உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

விபத்து காரணமாக, விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us