ADDED : மார் 16, 2026 04:17 AM
கடலுார்: தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பிரதி வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று கலெக்டர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், சிறப்பு முகாம்கள், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்டவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகி றது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான கோரிக்கை ஏதுமிருப்பின் அது குறித்த விவரங்களை கலெக்டர் அலுவலக முன்புற வாசலில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் போட்டுவிட்டு செல்லலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
