sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறைகேட்பு கூட்டம்: 760 மனுக்கள் குவிந்தன

/

குறைகேட்பு கூட்டம்: 760 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம்: 760 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம்: 760 மனுக்கள் குவிந்தன


ADDED : மார் 05, 2024 06:22 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், கலெக்டர் அருண்தம்புராஜ் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.

கடலுார் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பட்டா மாற்றம் என 760 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது துறை வாரியாக அலுவலர்கள் விசாரணை செய்தனர். கோரிக்கை மனு அளித்த 10 பேருக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ஊன்றுகோல், மூன்று நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா ஆணை வழங்கப்பட்டன. 3 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய கலெக்டர், வரப்பெற்ற மனுக்கள் மீது தீர ஆராய்ந்து, விதிமுறைகளுக்கு உட்பட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதி மனுக்கள் மீது உடனடி விசாரணை செய்து தீர்வு காண, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us