sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கருக்கலைப்பு வழக்கில் 2 பேர் மீது குண்டாஸ்

/

 கருக்கலைப்பு வழக்கில் 2 பேர் மீது குண்டாஸ்

 கருக்கலைப்பு வழக்கில் 2 பேர் மீது குண்டாஸ்

 கருக்கலைப்பு வழக்கில் 2 பேர் மீது குண்டாஸ்


ADDED : நவ 26, 2025 08:59 AM

Google News

ADDED : நவ 26, 2025 08:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வழக்கில், 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடி கிராமத்தில், சட்டவிரோதமாக கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை ஸ்கேனிங் மிஷின் மூலம் கண்டறியும் சோதனையில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

இதனையறிந்த வேப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் அகிலன் தலைமையிலான மருத்துவக்குழு, கடந்த அக்., 23ம் தேதி பொயனப்பாடி கிராமத்தில் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது, ஸ்கேனிங் மிஷின் மூலம் கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறியும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டது தெரிந்தது.

புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்துார் கிராமத்தை சேர்ந்த ராஜா,36; உட்பட 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில், ராஜா நேற்று முன்தினம் இரவு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்துாரைச் சேர்ந்த செந்தில்குமார், 36; சிறுபாக்கம் அடுத்த கச்சிமயிலுாரை சேர்ந்த ரமேஷ் மனைவி மாலதி, 34; ஆகியோரின் குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, செந்தில்குமார், மாலதி ஆகிய இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us