ADDED : ஏப் 17, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : விருத்தாசலம் அருகே 'போக்சோ' வழக்கில் கைதான டியூஷன் ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்,42. டியூஷன் சென்டர் நடத்தி வந்தார். கடந்த மார்ச் 14ம் தேதி காலை, டியூஷனுக்கு வந்த 17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, வெங்கடேசனை கைது செய்தனர்.
இவரின் குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரைப்படி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்படி, கடலுார் மத்திய சிறையில் உள்ள வெங்கடேசனிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கி நேற்று கைது செய்தனர்.