ADDED : ஏப் 21, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : குட்கா விற்ற பெட்டிக்கடைக்காரரை, போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி எஸ்.பி., மண்டபம் பகுதி பெட்டிக்கடையில் நேற்று குட்கா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
கடையில் 20 பாக்கெட் ஹான்ஸ் இருந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து பெட்டிக்கடைக்காரர் இளையராஜாவை, 42; கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.

