ADDED : ஏப் 28, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : குட்கா விற்ற பெட்டிக்கடை பெண் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, சுமைதாங்கி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது, அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்ற 55 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கடை உரிமையாளர் சாமிநாதன் மனைவி சுதா, 37; என்பவரை போலீசார் கைது செய் தனர்.