ADDED : டிச 28, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை முதுநகர் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் முதுநகர் சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரைக்காடு பகுதியைச்சேர்ந்த அய்யப்பன்,50, என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை போலீசார் கண்டறிந்து, அவரிடமிருந்து 160ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து, அய்யப்பனை கைது செய்தனர்.