/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஐந்து மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
/
ஐந்து மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ADDED : செப் 19, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி போலீஸ் சரகத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன ஐந்து மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பண்ருட்டி தண்டுப்பாளையம் முருகவேல், 35; திருவதிகை குட்டை தெரு கவிதா, 29; பி.ஆண்டிக்குப்பம் செல்வக்கண்ணு, 43; ஆண்டிப்பாளையம் சுந்தர்ராஜன், 50; டைவர்ஷன்ரோடு வெங்கடேசன்,49; ஆகிய 5 பேரின் மொபைல் போன்கள் காணாமல் போனது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி 5 மொபைல் போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.