sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 22 லட்சம் மோசடி; : 3 பேர் மீது வழக்கு

/

என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 22 லட்சம் மோசடி; : 3 பேர் மீது வழக்கு

என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 22 லட்சம் மோசடி; : 3 பேர் மீது வழக்கு

என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 22 லட்சம் மோசடி; : 3 பேர் மீது வழக்கு


ADDED : நவ 10, 2024 06:37 AM

Google News

ADDED : நவ 10, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவதாக கூறி 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம், இருப்புக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் அந்தோணிராஜ், 35; இவருக்கு உறவினர் மூலம் ஊமங்கலம் அடுத்த சமுட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

அவர் என்.எல்.சி., நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், 12 லட்சம் ரூபாய் கொடுத்தால் என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவதாகவும், ஜான் அந்தோணிராஜியிடம் கூறினார்.

அதன்பேரில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 2 தவணைகளாக 12 லட்சம் ரூபாயை ஜான் அந்தோணிராஜ் கொடுத்ததும், பணி நியமன ஆணையை அன்பழகன் கொடுத்ததார்.

ஜான் அந்தோணிராஜ் என்.எல்.சி., கார்ப்பரேட் அலுவலகத்தில் பணி நியமன ஆணையை காண்பித்த போது, அது போலி எனத் தெரிந்தது.

இதனால் அவர் பணத்தை திருப்பிக் கேட்டபோது, அன்பழகன் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.

ஊமங்கலம் அடுத்த புது தெற்கு வெள்ளூரைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன், 27; இவருக்கு என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடமும் சமுட்டிக்குப்பம் அன்பழகன், அவரது உறவினர்கள் பாலகிருஷ்ணன், அன்புராஜ் ஆகியோரிடம் அன்புச்செல்வன் 10 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

பணத்தை பெற்று ஒரு ஆண்டு ஆகியும் வேலை வாங்கித் தராமல் கொலை மிரட்டல் விடுத்தனர்.

ஜான் அந்தோணிராஜ், அன்புச்செல்வன் அளித்த புகார்களின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, அன்பழகன், பாலகிருஷ்ணன், அன்புராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us