/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்சி பொருளான உயர்மின் கோபுர விளக்கு
/
காட்சி பொருளான உயர்மின் கோபுர விளக்கு
ADDED : பிப் 11, 2026 03:32 AM
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் பழுதடைந்த உயர்மின் கோபுர விளக்கினை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன ர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலின் அருகில் உள்ள திடலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர்மின் கோபுர விளக்கு போடப்பட்டது.
இந்த விளக்கு எரியதாததால் கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு விளக்குகள் புதியதாக மாற்றப்பட்டன.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் உயர்மின் கோபுரத்தில் உள்ள விளக்கின் ஒயர்களை பறவைகள் கொத்தியதால் விளக்கு எரியவில்லை.
இதை சரி செய்திட ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. புதியதாக மாற்றப்பட்ட விளக்குகள் தற்போது காட்சி பொருளாகவே இருந்து வருகிறது.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்னர்.

