sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உயர்கல்வி சேர்க்கை முகாம் கடலுாரில் நாளை துவக்கம்

/

உயர்கல்வி சேர்க்கை முகாம் கடலுாரில் நாளை துவக்கம்

உயர்கல்வி சேர்க்கை முகாம் கடலுாரில் நாளை துவக்கம்

உயர்கல்வி சேர்க்கை முகாம் கடலுாரில் நாளை துவக்கம்


ADDED : ஜூலை 28, 2025 01:59 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: 2025--26ம் ஆண்டிற்கான உயர்கல்வி சேர்க்கை முகாம் நாளை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை, கிண்டியில் செயல்படும் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு கடலுார், கலெக்டர் அலுவலகத்தில் உடனடி சேர்க்கை முகாம் நாளை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இரு க்க வேண்டும்.

இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். அதனால் கடலுார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ.,- டிப்ளமோ மற்றும் பட்ட படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

இம்மாணவர்கள் மத்திய காலணி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை முகாம் நடக்கும் நாளில் பெற்று விண்ணப்பிக்கலாம். அரியலுார் மற்றும் உளுந்துார்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் காலணி உற்பத்தி புதிய ஆலை விரைவில் செயல்பட உள்ளதால் இந்த வாய்ப்பை விருப்பமுள்ள படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us