/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்
/
உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்
ADDED : ஏப் 03, 2025 08:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் வரும் 5ம் தேதி சிதம்பரத்தில் நடக்கிறது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வெழுதிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டு முகாம் நடத்தப்படுகிறது. 'என் கல்லுாரி கனவு' என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் 5ம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கூட்டரங்கில் நடக்கிறது.

