ADDED : பிப் 05, 2024 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். பெற்றோர் அசிரியர் கழக தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார்.
போட்டித்தேர்வு மாணவர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு உயர்கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் அருண் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

