sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள நெடுஞ்சாலைத்துறை 'கெடு'

/

ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள நெடுஞ்சாலைத்துறை 'கெடு'

ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள நெடுஞ்சாலைத்துறை 'கெடு'

ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள நெடுஞ்சாலைத்துறை 'கெடு'


ADDED : மார் 05, 2024 05:53 AM

Google News

ADDED : மார் 05, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் தாங்களே அகற்றி கொள்ள வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டிஸ் ஒட்டினர்.

சேத்தியாத்தோப்பு கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த 2017ம் ஆண்டு அளவீடு செய்து அத்துக்கல் நட்டனர்.

ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை அதிகாரிகள் அகற்ற வரும்போது கடைக்காரர்கள், குடியிருப்பு வாசிகள் வழக்கினை காரணம் காட்டி தடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி சேத்தியாத்தோப்பு கடைவீதியில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தீர்ப்பளித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு காலக்கெடு வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் அன்பரசன், வருவாய்த்துறையினருடன் சென்று சேத்தியாத்தோப்பு கடை வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி ஏழு நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு எச்சரித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us