ADDED : செப் 29, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் இரட்டைக் குளம் தெருவை சேர்ந்தவர் ராஜ்,55; கூலித்தொழிலாளி. நேற்று மாலை 5.00 மணியளவில் மின் கசிவு காரணமாக அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலின்பேரில், சிதம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து, அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.
புவனகிரி போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.