ADDED : ஜன 18, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே வீரமுடையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மனைவி ரேவதி, 37; இவர், பண்ருட்டி அடுத்த மருங்கூர் கீழக்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் முந்திரி கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
கடந்த 12 ம் தேதி வேலைக்கு சென்ற ரேவதி வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து, கிருஷ்ணராஜ் கொடுத்த புகாரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.