ADDED : மார் 13, 2026 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மனைவி புகாரின் பேரில், மாயமான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் சூர்யா, 28; பஸ் நிலையம் முன் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா, 25; இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 8ம் தேதி இரவு 10:30 மணியளவில், நண்பரை பார்க்க செல்வதாக கூறிச்சென்ற சூர்யா திரும்பி வரவில்லை.
கிருத்திகா புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

