ADDED : ஏப் 27, 2026 10:28 PM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: மாயமான கணவரை கண்டுபிடித்து தருமாறு மனைவி போலீசில் புகார் அளித்தார்
குறிஞ்சிப்பாடி, ஆண்டி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 45; இவர் கடந்த, 24ம் தேதி, புதுச்சேரி கன்னிகோயிலில் உள்ள தனியார் கிளாஸ் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றார். அன்று மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி சாவித்திரி குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
