ADDED : ஜன 10, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் முதுநகர் அடுத்த கண்ணாரப்பேட்டை, எரிமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் தினேஷ்வரன்,28. இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜனனி,19, என்பவருடன் திருமணமானது.
ஜன.1ம் தேதி, திருச்செந்துார் செல்வதாக கூறிவிட்டுசென்ற தினேஷ்வரன் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து ஜனனி அளித்த புகாரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.