ADDED : ஏப் 07, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடலுார், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்,43. வங்கி ஊழியர். இவரது மனைவி புகழ்வாணி,40; . ஒரு மகன், மகள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கிடையே கடந்த இரண்டு மாதங்களாக பிரச்னை நிலவியது. இந்நிலையில் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் ஜெய்சங்கரை காணவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
புகழ்வாணி அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

