/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரு வேறு சம்பவங்களில் சிறுமிகள் கர்ப்பம் சிறுவன் உட்பட இருவர் மீது 'போக்சோ'
/
இரு வேறு சம்பவங்களில் சிறுமிகள் கர்ப்பம் சிறுவன் உட்பட இருவர் மீது 'போக்சோ'
இரு வேறு சம்பவங்களில் சிறுமிகள் கர்ப்பம் சிறுவன் உட்பட இருவர் மீது 'போக்சோ'
இரு வேறு சம்பவங்களில் சிறுமிகள் கர்ப்பம் சிறுவன் உட்பட இருவர் மீது 'போக்சோ'
ADDED : செப் 21, 2024 06:21 AM
பண்ருட்டி: பண்ருட்டியில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கி, திருமணம் செய்தவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.
பண்ருட்டி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் தெய்வநாதன். இவரது மகன் முருகன்.26; இவர் உறவினரின் 17 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
பின் திருமணம் செய்துகொண்டதில் சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிந்து முருகனை தேடி வருகின்றனர்.
மேலும் ஓரு போக்சோ வழக்கு பதிவு:
பண்ருட்டி அடுத்த கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் . இவர் கடலுார் தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அண்ணாகிராமம் ஒன்றியம் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்தகாரம் செய்துள்ளார். இதனால் சிறுமி 6 மாத கர்ப்பமாக உள்ளார்.
புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.