/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் துறைமுகத்தில் மீன்கள் வரத்து அதிகரிப்பு
/
கடலுார் துறைமுகத்தில் மீன்கள் வரத்து அதிகரிப்பு
ADDED : டிச 09, 2024 07:31 AM

கடலுார் : கடலுார் துறைமுகத்தில் நேற்று மீன்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
கடலுார் துறைமுகத்தில் இருந்து சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள், விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இவ்வாறு பிடித்து வரும் மீன்களை கடலுார் துறைமுகத்தில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலுார் துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.
இதில், நேற்று கானங்கத்தை மீன், வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மீனவர்கள் வலையில் சிக்கிய 20 டன் கானங்கத்தை மீன்களை ஐஸ் பெட்டியில் வைத்து கேரளாவிற்கு ஏற்றிச்சென்றனர்.