/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் துறைமுகத்தில் மத்தி மீன் வரத்து அதிகரிப்பு
/
கடலுார் துறைமுகத்தில் மத்தி மீன் வரத்து அதிகரிப்பு
கடலுார் துறைமுகத்தில் மத்தி மீன் வரத்து அதிகரிப்பு
கடலுார் துறைமுகத்தில் மத்தி மீன் வரத்து அதிகரிப்பு
ADDED : மார் 04, 2024 12:31 AM

கடலுார் : கடலுார் துறைமுகத்தில் மத்தி மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.
கடலுார் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, சோனாங்குப்பம், ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
நேற்று வழக்கம்போல் சென்ற மீனவர்களின் வலைகளில் அதிகளவில் மத்தி மீன்கள் சிக்கின.
வலையில் சிக்கிய மத்தி மீன்களை, படகில் குவித்துக் கொண்டு, மீனவர்கள் துறைமுகத்திற்கு திரும்பி வந்தனர்.
டன் கணக்கில் குவிந்திருந்த மத்தி மீன்களை வாங்க நுாற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் துறைமுகம் பகுதியில் திரண்டனர்.
மத்தி மீன்களை வியாபாரிகள் வாங்கி கேரளாவுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

