/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெருநாய்கள் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் தவிப்பு
/
தெருநாய்கள் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : செப் 28, 2025 11:13 PM

விருத்தாசலம்,: விருத்தாசலத்தில் தெருநாய்கள் அதிகரிப்பு காரணமாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
விருத்தாசலம் நகராட்சி 33 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
இங்கு அரசு பொது மருத்துவமனை, கோட்ட அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள், புகழ்பெற்ற கோவில்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன.
இங்குள்ள வீதிகள் தோறும் தெருநாய்கள் எண்ணிக்கை பலமடங்கு பெருகி விட்டதால் சாலையில் நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டி கடிக்கப் பாய்ந்து வருகின்றன.
இதனால் பலர் கீழே விழுந்து காயமடையும் அவலம் தொடர்கிறது.
நாய் விரட்டும்போது நெடுஞ்சாலையில் செல்வோர் த டுமாறி, பின்னால் அல்லது முன்புறம் வரும் வாகனங்களில் மோதி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதுபோல், கனரக வாகனங்களில் சிக்கி நாய்கள் உயிரிழக்கும் பரிதாபமும் அவ்வப்போது நடக்கிறது.
சிலர் நாய் கடித்து மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெறும் அவலம் உள்ளது.
சமீபத்தில் தெரு நாய்களால் சிறுவர், சிறுமியர் உயிரிழந்த விவகாரம் பூதாகாரமான நிலையில், நாய்களுக்கு உணவளிப்போர் அதனால் ஏற்படும் பாதிப்புக்கு பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது.
அந்தந்த நகர, பேரூர் மற்றும் ஊரக பகுதிகளில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
எனவே, விருத்தாசலம் நகராட்சியில் வீதிகள் தோறும் பெருகி வரும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.